ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

வினாத்தாள் கசிந்த சர்ச்சை: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு இல்லை! 

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு கணித பாடத்துக்கான தேர்வில் வினாத்தாள் கசிந்த சர்ச்சையில் மறுதேர்வு நடத்தப்படாது என்று தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஏப்ரல் 2018, 1:07 pm IST

புதுதில்லி: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு கணித பாடத்துக்கான தேர்வில் வினாத்தாள் கசிந்த சர்ச்சையில் மறுதேர்வு நடத்தப்படாது என்று தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த 5-ஆம் தேதி தொடங்கின.  இதில் பிளஸ்-2 தேர்வில் பொருளியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட வினாத் தாள்கள் முன்கூட்டியே கசிந்ததாகத் தகவல்கள் பரவின.

முதலில்  திட்டவட்டமாக மறுத்து வந்த சிபிஎஸ்இ வாரியம், அதுதொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டபோது பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. அதன் பின்னர், +2 வகுப்பு பொருளியல் மற்றும் 10ஆம் வகுப்பு கணித பாடத்துக்கான வினாத்தாள்கள் கசிந்ததை வாரியம் ஒப்புக் கொண்டது. அவற்றுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் வினாத்தாள்களை கசிய விட்டதாக, தில்லியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்டிலும்  6 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.  

பின்னர் வினாத்தாள் வெளியானதால் ரத்து செய்யப்பட்ட சிபிஎஸ்இ பிளஸ் 2 பொருளாதார தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்தது.

இந்நிலையில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு கணித பாடத்துக்கான தேர்வில் வினாத்தாள் கசிந்த சர்ச்சையில் மறுதேர்வு நடத்தப்படாது என்று தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் தனது ட்விட்டர் பக்கத்தில் மாணவர்களின் நலன் கருதி தில்லி மற்றும் ஹரியானா உள்ளிட்ட நாட்டின் எந்த பகுதியிலும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்படாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.