எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

நீலகிரி எச்பிஎஃப் தொழிற்சாலையின் எஞ்சிய ஊழியர்களுக்கும் 'விஆர்எஸ்': மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

நீலகிரியில் உள்ள ஹிந்துஸ்தான் ஃபோட்டோ ஃபிலிம் நிறுவனத்தின் எஞ்சிய ஊழியர்களுக்கும் விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

Updated On :6 ஏப்ரல் 2018, 1:08 am IST

நீலகிரியில் உள்ள ஹிந்துஸ்தான் ஃபோட்டோ ஃபிலிம் நிறுவனத்தின் எஞ்சிய ஊழியர்களுக்கும் விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
இதுதொடர்பாக மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் கே.ஆர். அர்ஜுனன் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய கனரக தொழில் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ மாநிலங்களவையில் வியாழக்கிழமை அளித்த பதில் விவரம்:
ஹிந்துஸ்தான் ஃபோட்டோ ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம், மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. 2013 ஏப்ரலில் இருந்து எச்பிஎஃப் நிறுவனத்தில் உற்பத்தி ஏதும் இல்லை.
இந்த நிறுவனத்திற்கு புத்துயிரூட்ட கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்விடைந்துவிட்டன. இந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தேசிய சம்பள விகிதத்தில் விருப்ப ஓய்வு அளிக்க சிசிஇஏ கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 30.06.2016 வரை 466 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டது. எனினும், 165 ஊழியர்கள் விஆர்எஸ்ஸுக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை அல்லது தகுதியான மனுக்களை அளிக்கவில்லை. இதனால், அவர்களுக்கு விஆர்எஸ் வழங்கப்படவில்லை. 
தற்போது நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி எஞ்சியுள்ள ஊழியர்களுக்கும் விஆர்எஸ் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. 
அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.