பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் காங்கிரஸார் சைக்கிள் பேரணியை நடத்தினர். கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சஞ்சய் நிருபம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற இப்பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
அப்போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக, பேரணியைத் தொடங்கி வைத்து சஞ்சய் நிருபம் பேசியதாவது:
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் ஒரு பீப்பாய் கச்சாய் எண்ணெய்யின் விலை 120 டாலர்களாக இருந்தது. அந்த காலகட்டத்திலேயே ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.70-க்குத்தான் விற்பனை செய்யப்பட்டது. தற்போது கச்சா எண்ணெய் விலை 60 டாலர்களாகக் குறைந்துள்ளது. ஆனால், ரூ.75-க்கும் அதிகமாக பெட்ரோல் விலை இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் எரிபொருள் மீது கூடுதல் வரி விதிப்பதுதான் அதற்குக் காரணம்.
மும்பை, தாணே நகரங்களில் மட்டும் பெட்ரோலியப் பொருள்களுக்கு 40 சதவீத மதிப்பு கூட்டப்பட்ட வரியை மாநில அரசு விதித்துள்ளது. இதனால், சாமானிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கூடுதல் வரியை குறைக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோலியப் பொருள்களைக் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் அதன் மீதான வரிவிதிப்புகள் ஒழுங்குமுறைப்படுத்தப்படும். இல்லையெனில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அதிகரித்தாலும் மக்களுக்கு பாதிப்புதான் மிஞ்சும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுக்கு ரூ. 3,000 கோடி வழங்குவதாக பரவும் செய்தி பொய்! டிரம்ப்

உணவை சூடாக்கிச் சாப்பிடலாமா? குடல் தொற்றுக்கும் ஃபுட் பாய்சனுக்கும் வித்தியாசம் என்ன?
மக்களின் பாதுகாப்பு பிரச்னைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? மு.க. ஸ்டாலின் கேள்வி!







