புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: பிரதமர் இல்லம் அருகே போராட முயன்ற தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்கள் கைது! 

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஞாயிறன்று பிரதமர் மோடியின் இல்லம் அருகே போராட முயன்ற தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :8 ஏப்ரல் 2018, 9:01 am

DIN

புதுதில்லி: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஞாயிறன்று பிரதமர் மோடியின் இல்லம் அருகே போராட முயன்ற தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், அதனை மத்திய அரசு ஏற்காத நிலையில் மத்திய அமைச்சரவையில் இருந்து அக்கட்சியின் மந்திரிகள் பதவி விலகினர்.

இதற்கு எதிர்வினையாக ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சியின் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்த பாரதீய ஜனதா கட்சி மந்திரிகளும் பதவி விலகினர். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த விவகாரம் கடுமையாக எதிரொலித்தது.  நாடாளுமன்றத்திற்கு வெளியே அக்கட்சியின் எம்.பி.க்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு  வந்தனர்.

இந்நிலையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஞாயிறன்று பிரதமர் மோடியின் இல்லம் அருகே போராட முயன்ற தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரான ஒய்.எஸ். சவுத்ரியின் இல்லத்தில் ஞாயிறு காலை அக்கட்சியின் எம்.பி.க்கள் ஒன்றாக கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.  இதில் அடுத்த கட்டமாக நடவடிக்கை எடுப்பது பற்றி விவாதித்து, பிரதமர் இல்லம் அருகே போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. 

அதன்படி தில்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் அமைந்துள்ள பிரதமர் இல்லம் நோக்கி சென்று போராட்டம் நடத்த புறப்பட்டனர்.  அவர்களை, தில்லி போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.