எந்த மதத்தை தழுவ வேண்டும்? என்பது குறித்த முடிவை எடுப்பது ஒருவருடைய தனிப்பட்ட உரிமை என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், அதன்படி, ஹாதியாவுக்கும் அவரது நம்பிக்கைகளை வரையறுத்துக் கொள்வதற்கு பூரண சுதந்திரம் உண்டு எனக் கூறியுள்ளது.
கேரளப் பெண் ஹாதியாவின் வழக்கில் உச்ச நீதிமன்றம் அண்மையில் வெளியிட்ட தீர்ப்பின் முழு விவரங்கள் இணையதளத்தில் திங்கள்கிழமை பதிவேற்றப்பட்டது. அதில், தனிமனிதர்களின் மதம் மற்றும் நம்பிக்கை சார்ந்த பல்வேறு விஷயங்களில் உள்ள உரிமைகள் விளக்கப்பட்டுள்ளன.
கேரளத்தைச் சேர்ந்த ஹாதியா, இஸ்லாமிய இளைஞரான ஷாஃபின் ஜஹானைக் காதலித்து அவர் திருமணம் செய்தார். அதற்காக அப்பெண் முஸ்லிம் மதத்துக்கு மாறினார். இதனிடையே மதம் மாற்றுவதற்காக திட்டமிட்டு இந்தக் காதல் நாடகம் அரங்கேற்றப்பட்டிருப்பதாக சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தை குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் அந்தத் திருமணத்தை ரத்து செய்தது. அதை எதிர்த்து ஷாஃபின் ஜஹான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அதனைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்தச் சூழலில், ஹாதியா வழக்கின் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு அண்மையில் வெளியிட்டது. கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், ஹாதியாவின் திருமணம் செல்லும் என்று அறிவித்தது. இந்நிலையில், அந்தத் தீர்ப்பின் விரிவான அம்சங்கள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
மதம் மாறுவதை ஹாதியாவின் தந்தை மிகப் பெரிய வரம்பு மீறல் நடவடிக்கையாகக் கருதியிருக்கலாம். அதன் தொடர்ச்சியாகவே, தனது மகளின் நலன் காக்க வேண்டும் என்ற நோக்கில் அவரது திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், விரும்பிய வாழ்க்கையையும், மார்க்கத்தையும் தேர்ந்தெடுப்பதைத் தடுக்கும் உரிமை சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்குக் கூட இல்லை.
அதன்படி பார்க்கும்போது ஹாதியாவின் மதமாற்றத்தையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அவ்வாறு இல்லையெனில், அரசியல் சாசனத்தில் தனிமனிதர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை நாம் மறுதலிக்கிறோம் என்றே அர்த்தம்.
தனிநபர்களுக்கு உரிமைகளை வழங்குவது அல்ல தற்போது முக்கியம்; மாறாக அந்த உரிமைகளுக்கு மதிப்பளித்து உளமாற ஏற்றுக்கொள்வதுதான் முக்கியம். அந்த வகையில் இவ்விவகாரத்தை அணுகும்போது, ஹாதியாவுக்கு, தனது திருமணத்தையும், இறை வழிபாட்டையும் தேர்ந்தெடுப்பதற்கான முழு அதிகாரமும், சுதந்திரமும் உள்ளது என்று அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

