பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். தில்லியில் நடைபெற்ற போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமை வகித்தார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு, காவிரி விவகாரம், ஆந்திர சிறப்பு அந்தஸ்து விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டி, அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசியதாவது:
நாடு முழுவதும் பாஜக பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது. அவர்கள் எப்போதுமே தலித் மற்றும் பழங்குடியினவர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர். தலித் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளை மத்திய அரசு நசுக்கி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மட்டும் தான் போராடி வருகிறது. வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வை வீழ்த்தி காங்கிரஸ் மகத்தான ஆட்சியை அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஹோர்முஸ் நீரிணை: சீன, ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடல்!

3 மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா

தொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

மாநிலங்களவையில் நிதின் நவீன் உள்பட புதிய எம்பிக்கள் பதவியேற்பு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


