அடுத்த 25 ஆண்டுகளுக்கு சர்வதேச எரிசக்தி துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
16-ஆவது சர்வதேச எரிசக்தி கருத்தரங்க கூட்டம் புதுதில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதனை இந்திய அரசு கடந்த 1996-ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் தற்போது நடத்துகிறது. சீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் துணை நின்றன.
இந்த கூட்டத்தில் மொத்தம் 92 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவற்றில் 72 நாடுகள் சர்வதேச எரிசக்தி கருத்தரங்கத்தில் அங்கம் வகிப்பவை. மீதமுள்ள 20 நாடுகள் இந்த கருத்தரங்க கூட்டத்தில் கலந்துகொள்ள விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளன.
இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
அடுத்த 25 ஆண்டுகளுக்கு சர்வதேச அளவிலான எரிசக்தி துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். இந்தியாவில் தயாரிப்பு (மேக் இன் இந்தியா) திட்டத்தின் அடிப்படையில் ஜவுளி, பெட்ரோ கெமிக்கல் மற்றும் பொறியியல் துறைகளின் தொழிற்சாலைகளில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகப்படுத்தி உற்பத்தியை பெருக்குவதற்கு மத்திய அரசு அனைத்து விதங்களிலும் ஊக்கமளித்து வருகிறது. இந்தியாவின் எரிசக்தி துறையில் எனது எதிர்கால திட்டத்தின் அடிப்படையில் எரிசக்தியில் எளிய அணுகுமுறை, எரிசக்தி ஆற்றல், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எரிசக்தியின் நீண்டகால தாக்குபிடிப்புத் தன்மை உள்ளிட்டவைகளை இதன் நான்கு தூண்களாக கருதுகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தத் தேர்தலில் தேமுதிகதான் 'கேம் சேஞ்சர்': பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு நேர்காணல்

வீட்டில் பதுக்கிய 1,361 மது புட்டிகள் பறிமுதல்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: தமிழகமே கவனிக்கும் திமுகவின் கோட்டை!

18.4.1976: தமிழ் நாட்டில் கைதானோரில் 90% விடுதலை - உள் துறை அமைச்சர் தகவல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


