சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஏப்ரல் 22 மற்றும் 23-ஆம் தேதி சீனா, 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் மங்கோலியா ஆகிய நாடுகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பயணம் மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தின் போது சீனாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கருத்தரங்கில் கலந்துகொள்கிறார். இதில் 2017-ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுநேர பிரதிநிதியாக இணைந்துள்ளது.
பின்னர் சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் ஈ உடன் சுஷ்மா ஸ்வராஜ் இரு நாடுகளின் உறவு குறித்து கலந்துரையாடுகிறார் என்று வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள டோக்லாம் பிரச்னை கடந்த 1 வருடமாக நீடித்து வரும் நிலையில், இவர்களின் சந்திப்பு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தத் தேர்தலில் தேமுதிகதான் 'கேம் சேஞ்சர்': பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு நேர்காணல்

வீட்டில் பதுக்கிய 1,361 மது புட்டிகள் பறிமுதல்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: தமிழகமே கவனிக்கும் திமுகவின் கோட்டை!

18.4.1976: தமிழ் நாட்டில் கைதானோரில் 90% விடுதலை - உள் துறை அமைச்சர் தகவல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


