முன் அறிவிப்பின்றி ஏற்படுத்தப்படும் மின்வெட்டு ஒரு மணிநேரத்துக்குள் சரிசெய்யப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நுகர்வோரிடம் மின்சாரம் விநியோகிக்கும் தனியார் நிறுவனம் அபராதம் செலுத்தும் திட்டத்தை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதன்மூலம் திடீரென ஏற்படும் மின்வெட்டு பாதிப்பு ஒரு மணி நேரத்துக்குள்ளாக சரிசெய்யப்பட வேண்டும். அது தவறும் பட்சத்தில் அவ்வாறு மின் விநியோகம் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நுகர்வோருக்கும் முதல் இரண்டு மணிநேரங்களுக்கு ரூ.50 மற்றும் அதற்கும் மேற்பட்டால் ரூ.100 சம்பந்தப்பட்ட மின் விநியோகம் செய்யும் தனியார் நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்.
இந்த அபராத தொகையானது சம்பந்தப்பட்ட நுகர்வோரின் மின் கட்டணத்தில் இருந்து குறைக்கப்படும்.
இத்திட்டத்துக்கான அரசாணை தில்லி அரசால் செவ்வாய்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அனுமதி வழங்கியுள்ளார். இதையடுத்து தற்போது புது தில்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜல் ஒப்புதலுக்காக இத்திட்டம் தயார் நிலையில் உள்ளது.
நுகர்வோருக்கு சாதகமான இந்த திட்டத்துக்கு துணை நிலை ஆளுநர் நிச்சயம் அனுமதி வழங்குவார் என்று தில்லி அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இது இதர மாநிலங்களுக்கும் நுகர்வோர் சேவையில் சிறந்த உதாரணமாக விளங்கும் என்றும் தில்லி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


