11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை

தெற்கு பிலிப்பின்ஸில் ராணுவத்தினருக்கும், பிரிவினைவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் பெண்கள் உள்பட 10 பிரிவினைவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

News image
Updated On :18 ஏப்ரல் 2026, 2:54 am IST

தெற்கு பிலிப்பின்ஸில் ராணுவத்தினருக்கும், பிரிவினைவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் பெண்கள் உள்பட 10 பிரிவினைவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

லானௌ டெல் சா் மாகாணத்தில் பதுங்கியிருந்த ‘தௌலா இஸ்லாமியா-மௌட்’ அமைப்பின் தளபதி அமரோல் மங்கோரான்காவைக் கைது செய்யும் முயற்சியில் இம்மோதல் வெடித்தது. சம்பவ இடத்திலிருந்து நவீன ரக துப்பாக்கிகள், வெடிகுண்டு பாகங்கள் கைப்பற்றப்பட்டன.

கடந்த 2014-இல், பிலிப்பின்ஸின் மிகப்பெரிய ஆயுதக் குழுவான மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி, அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டதைத் தொடா்ந்து அந்நாட்டில் வன்முறை கணிசமாகக் குறைந்தது. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்த சில சிறிய பிரிவினைவாதக் குழுக்கள் தனி மாநிலக் கோரிக்கையை முன்வைத்து அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றன.