கால்நடை தீவன ஊழல் வழக்கில் 37 பேருக்கு 3.5 ஆண்டுகளிலிருந்து 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன், ஒட்டுமொத்தமாக ரூ.29 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
கால்நடை பராமரிப்புத் துறை முன்னாள் இயக்குநர் ஓ.பி.திவாகருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இருவேறு வழக்குகளில் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையை அவருக்கு ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நீதிமன்றம் வழங்கி உத்தரவிட்டது என்று சிபிஐ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
முன்னாள் அதிகாரிகள் 15 பேருக்கு தலா 7 ஆண்டுகள் (இரண்டு வழக்குகளில் தலா 3.5 ஆண்டுகள்) கடுங்காவலும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
மாட்டுத் தீவனத்தை அளித்தவர்களில் 3 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் 18 பேருக்கு தலா 3.5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது என்று அந்தச் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
மானிய விலையில் விவசாயிகளுக்கு மாட்டுத் தீவனம் அளித்ததாக போலியாக ரசீதுகளை அளித்து முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஜார்க்கண்ட் அதிகாரிகளுக்கு எதிராகப் புகார் எழுந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக ஆட்சி தீய சக்தி திமுகவின் ஓட்டால் இயங்கிறது: மு.க. ஸ்டாலின் பேச்சு

ஈரான் ஒப்பந்தத்துக்கு இணங்காவிட்டால் எதுவும் மிஞ்சாது! - டிரம்ப் மிரட்டல்!
அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு! பழனிவேல் தியாகராஜன்

கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்!
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
