மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ரூ.2,654 கோடி கடன் மோசடி விவகாரம்: குஜராத் தொழிலதிபர் கைது, சிபிஐ நடவடிக்கை

குஜராத்தில் உள்ள வதோராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரூ.2,654 கோடி கடன் மோசடி செய்த விவகாரத்தில் தனது மகன்களுடன் சிபிஐ-யால் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :18 ஏப்ரல் 2018, 3:16 pm

குஜராத்தில் உள்ள வதோராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரூ.2,654 கோடி கடன் மோசடி செய்த விவகாரத்தில் தனது மகன்களுடன் சிபிஐ-யால் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

டைமண்ட் எரிசக்தி உள்கட்டமைப்பு நிறுவனத்தின் அதிபரான நாராயண் பட்னாகர் மற்றும் அவரது மகன்கள் அமித் மற்றும் சுமித் ஆகியோரை ராஜஸ்தானில் சிபிஐ கைது செய்தது.

இவர்கள் 3 பேரும் இணைந்து பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.670.51 கோடி, பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ.348.99 கோடி, ஐசிஐசிஐ வங்கியில் ரூ.279.46 கோடியும் கடன் பெற்றுள்ளனர். 2008-ஆம் ஆண்டு முதல் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் மொத்தம் ரூ.2 ஆயிரத்து 654 கோடி கடன் திருப்பிச் செலுத்தவில்லை.

எனவே 2016–17–ஆம் நிதியாண்டில் இவைகள் வாராக்கடன்களாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து இந்த 3 பேரும் கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல் தலைமறைவாகி விட்டதாக வங்கிகளின் கூட்டமைப்பு சிபிஐ-யிடம் புகார் அளித்தன. மேலும் கடன் பெற போலியான ஆவணங்களை சமர்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் உள்ள பரஸ் மஹால் என்ற சொகுசு விடுதியில் பதுங்கியிருந்த 3 பேரையும் பயங்கரவாத தடுப்பு படை உதவியுடன் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.