மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ரூ.2,654 கோடி கடன் மோசடி விவகாரம்: குஜராத் தொழிலதிபர் கைது, சிபிஐ நடவடிக்கை

குஜராத்தில் உள்ள வதோராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரூ.2,654 கோடி கடன் மோசடி செய்த விவகாரத்தில் தனது மகன்களுடன் சிபிஐ-யால் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :18 ஏப்ரல் 2018, 8:46 pm IST

குஜராத்தில் உள்ள வதோராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரூ.2,654 கோடி கடன் மோசடி செய்த விவகாரத்தில் தனது மகன்களுடன் சிபிஐ-யால் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

டைமண்ட் எரிசக்தி உள்கட்டமைப்பு நிறுவனத்தின் அதிபரான நாராயண் பட்னாகர் மற்றும் அவரது மகன்கள் அமித் மற்றும் சுமித் ஆகியோரை ராஜஸ்தானில் சிபிஐ கைது செய்தது.

இவர்கள் 3 பேரும் இணைந்து பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.670.51 கோடி, பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ.348.99 கோடி, ஐசிஐசிஐ வங்கியில் ரூ.279.46 கோடியும் கடன் பெற்றுள்ளனர். 2008-ஆம் ஆண்டு முதல் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் மொத்தம் ரூ.2 ஆயிரத்து 654 கோடி கடன் திருப்பிச் செலுத்தவில்லை.

எனவே 2016–17–ஆம் நிதியாண்டில் இவைகள் வாராக்கடன்களாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து இந்த 3 பேரும் கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல் தலைமறைவாகி விட்டதாக வங்கிகளின் கூட்டமைப்பு சிபிஐ-யிடம் புகார் அளித்தன. மேலும் கடன் பெற போலியான ஆவணங்களை சமர்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் உள்ள பரஸ் மஹால் என்ற சொகுசு விடுதியில் பதுங்கியிருந்த 3 பேரையும் பயங்கரவாத தடுப்பு படை உதவியுடன் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.