மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

லிங்காயத்து தத்துவவாதி பாஸவண்ணா தான் சமூக நல்லிணக்கத்துக்கு வித்திட்டவர்: சித்தராமையா

லிங்காயத்து தத்துவவாதி பாஸவண்ணா தான் முதன்முதலில் சமூக நல்லிணக்கத்துக்கு வித்திட்டவர் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :18 ஏப்ரல் 2018, 10:32 am

லிங்காயத்து தத்துவவாதி பாஸவண்ணா தான் முதன்முதலில் சமூக நல்லிணக்கத்துக்கு வித்திட்டவர் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த தத்துவவாதி பாஸவண்ணாவுக்கு புதன்கிழமை ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையடுத்து அவருக்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், பாஸவேஷ்வரா சிலைக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா மலர்தூவி மரியாதை செலுத்த அனுமதிக்கக் கூடாது என்று கர்நடாக மாநில பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லாகே செவ்வாய்கிழமை தெரிவித்தார். மேலும் அவருக்கு பாஸவேஷ்வரா ஜெயந்தி கொண்டாடும் அருகதை இல்லை எனவும் குற்றம்சாட்டினார்.

இதற்கு கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, பாஸவேஷ்வரா ஒன்றும் பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லாகேவினுடைய தனிப்பட்ட சொத்து கிடையாது. அவரை யார் வேண்டுமானாலும் உரிமை கொண்டாடலாம். இதை செய்யக் கூடாது என்று காங்கிரஸுக்கு உத்தரவிட அவர் யார் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில் நடைபெற்ற பாஸவண்ணா ஜெயந்தி விழாவில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா, பாஸவேஷ்வரா சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக பாஸவாவினுடைய தத்துவங்கள் அமைந்துள்ளன. இந்த சமூகத்தில் முதன்முதலில் சமதர்மப் புரட்சியை ஏற்படுத்தியது அவர்தான். சமூக ஒற்றுமைக்கு முதன்முதலில் பாஸவண்ணா தான் வித்திட்டவர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.