தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

குஜராத் கலவர வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான உத்தரவு ஒத்திவைப்பு

குஜராத்தில் கடந்த 2002-இல் ஒடே என்ற இடத்தில் ஏற்பட்ட கலவரத்தில் சிறுபான்மையினர் 23 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான

Updated On :19 ஏப்ரல் 2018, 1:20 am IST

குஜராத்தில் கடந்த 2002-இல் ஒடே என்ற இடத்தில் ஏற்பட்ட கலவரத்தில் சிறுபான்மையினர் 23 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான உத்தரவை அந்த மாநில உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
குஜராத்தில் கடந்த 2002-இல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மையினருக்கு எதிராக கலவரங்கள் நிகழ்ந்தன. அப்போது, ஆனந்த் மாவட்டத்திலுள்ள ஒடே என்ற இடத்தில் குழந்தைகள், பெண்கள் என 23 பேர் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கில் கடந்த 2012-இல் தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், 18 பேருக்கு ஆயுள் தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தது. மேலும் 23 பேரை வழக்கில் இருந்து விடுவித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக, வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் மாநில அரசின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், 'ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட18 பேருக்கும் தூக்கு தண்டனையும், 7 ஆண்டு சிறை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட வேண்டும்' என்று கோரப்பட்டது. 
இதேபோல், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக குற்றவாளிகள் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை அண்மையில் நிறைவடைந்தது.
இந்நிலையில், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தங்களது உத்தரவை நீதிபதிகள் அகில் குரேஷி, பி.என்.காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு ஒத்திவைத்துள்ளது. இத்தகவலை, குற்றவாளிகள் தரப்பில் ஆஜராகும் வழக்குரைஞர் யோகேஷ் லக்கானி புதன்கிழமை தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.