ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

காவிரி மேலாண்மை வாரியம் அரசியலமைப்புக்கு விரோதமான ஒன்று: மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம்! 

காவிரி மேலாண்மை வாரியம் அரசியலமைப்புக்கு விரோதமான ஒன்று என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் ஒன்றில்,  கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :22 ஏப்ரல் 2018, 10:22 pm IST

பெங்களூரு: காவிரி மேலாண்மை வாரியம் அரசியலமைப்புக்கு விரோதமான ஒன்று என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் ஒன்றில்,  கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தியது. மேலும் நீதிமன்றம் அளித்த 6 வார காலக்கெடு முடிவடைந்த நிலையில், ‘ஸ்கீம்‘ என்பதற்கு விளக்கம் கோரியும், செயல் திட்டத்தை அமல்படுத்த மேலும் 3 மாத கால அவகாசமும் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு செய்தது.

இந்த மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்றம் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு திட்டத்தை மே மாதம் 3–ந் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு கடந்த 9–ந் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அரசியலமைப்புக்கு விரோதமான ஒன்று என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் ஒன்றில்,  கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு அவர் சனிக்கிழமையன்று எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு திட்டத்தை மே மாதம் 3–ந் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆனால் இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கர்நாடக அரசு கடுமையாக எதிர்க்கிறது. ஏனென்றால், காவிரி மேலாண்மை வாரியம் என்பது நமது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட ஒன்று கிடையாது.

மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க  எந்த வழிமுறையையும் நீதிமன்றம் எடுத்து கூறவில்லை. அத்துடன் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டதே தவிர அதுதொடர்பான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

எனவே உச்ச நீதிமன்றத்தில் வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்வதற்கு முன்பாக உங்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.