புதுதில்லி: நாடாளுமன்றத்தை இழுத்து மூடியவர் மோடி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதா அரசு அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில், ஆர்.எஸ்.எஸ் சார்புடையவர்களை நியமிக்கிறது. இதன் காரணமாக இத்தகைய அரசியல் சாசன அமைப்புகளை மோடி சிதைக்கிறார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
எனவே 'அரசியல் சாசனத்தினைக் காப்பாற்றுவோம்' என்ற பெயரில் நாடு தழுவிய பிரசார இயக்கத்தை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து வருகிறது. அதன் துவக்க விழா தில்லியில் திங்களன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்பொழுது அவர், 'மோடி நாடாளுமன்றத்தை இழுத்து மூடியுள்ளார். அத்துடன் உச்ச நீதிமன்றத்தினை நசுக்குகிறார்' என்று தெரிவித்தார்.
முன்னதாக பாஜகவினர் சரியாக பதிலளிக்காததால் முடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக சக நீதிபதிகளின் வெளிப்படையான பத்திரிகையாளர் சந்திப்பு ஆகியவற்றை ராகுல் குறிப்பிட்டு இவ்வாறு பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையையும் களமிறக்கி பாஜக பிரசாரம் செய்தும் பலனளிக்காது! - மமதா
கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்!

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK

தற்கொலை எண்ணத்தில் இருந்தேன்: ரத்னகுமார்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


