பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

தற்கொலை எண்ணத்தில் இருந்தேன்: ரத்னகுமார்

ரத்னகுமாரின் பேச்சு குறித்து...

News image

ரத்னகுமார்

Updated On :25 ஏப்ரல் 2026, 8:04 pm IST

இயக்குநர் ரத்னகுமார் மேயாத மான் குறித்து பேசியுள்ளார்.

மேயாத மான், குலு குலு போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாக அறியப்படுபவர் இயக்குநர் ரத்னகுமார்.

இவர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், லியோ, விக்ரம் போன்ற திரைப்படங்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதி கூடுதலாக கவனிக்கப்பட்டார்.

தற்போது, கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 29 என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் மே 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ரத்னகுமார், “மேயாத மான் திரைப்படத்தை என் சகோதரருடன் தயாரிக்கலாம் என முடிவு செய்திருந்தேன். ஆனால், ஒரு தயாரிப்பாளர் கிடைத்தார். முதலில் இக்கதையில் நடிகர்கள் ஜெய் மற்றும் சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அப்போதுதான், பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது.

அந்த தயாரிப்பாளர் ஒப்பந்தத்தைக் கிழித்துவிட்டு, பழைய பணத்தை புதியதாக மாற்ற வேண்டுமென படத்திலிருந்து விலகினார். அந்த நேரத்தில் எனக்கு தற்கொலை எண்ணம் இருந்தது. சபரிமலைக்கு மாலை போட்டு சென்றேன். அடுத்த 2 மாதத்தில் மேயாத மானைத் தயாரிக்க கார்த்திக் சுப்புராஜ் முன்வந்ததும் படம் துவங்கியது” எனக் கூறியுள்ளார்.

Director Rathnakumar has spoken about Meyaadha Maan and his suicide thoughts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.