ரத்னகுமார் இயக்கிய 29 திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் காதல் திரைப்படமாக உருவான 29 திரைப்படம், மே 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
கதாநாயகனாக விது நடிக்க, நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்திருந்த இந்தப் படத்தில் இடம்பெற்ற சான் ரோல்டனின் பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. ஆனால், திரையரங்குகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
தற்போது, ஓடிடி வெளியீட்டுக்குப் பின் பலரும் பாராட்டி வருகின்றனர். முக்கியமாக, வசனங்கள் சிறப்பாக இருந்ததாக பதிவிட்டுள்ளனர். இந்த நிலையில், இயக்குநர் ரத்னகுமார், “கொஞ்சூண்டு அன்புதான் கேட்டேன், பேரன்புக்கு நன்றி" என நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்டுள்ளார்.
A deleted scene from the film directed by Rathnakumar has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







