யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காங்கிரஸ் ராவணன்...மம்தா சூர்ப்பனகை: பாஜக எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு! 

காங்கிரஸ் ராவணன் போலவும், மம்தா பானர்ஜி சூர்ப்பனகையாகவும் இருக்கிறார்கள் என்ற உத்தரப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ ஒருவரின் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.

News image
Updated On :25 ஏப்ரல் 2018, 8:48 am

DIN

பைரியா (உ.பி): காங்கிரஸ் ராவணன் போலவும், மம்தா பானர்ஜி சூர்ப்பனகையாகவும் இருக்கிறார்கள் என்ற உத்தரப்பிரதேச பாஜக எம்.எல்.ஏ ஒருவரின் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பைரியா தொகுதி பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏவாக இருப்பவர் சுரேந்திரா சிங். அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். சமீபத்தில் கூட உன்னோ தொகுதியில் பாஜக எம்.எல்.ஏ செங்கர் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் இவர் கூறிய கருத்தால் சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் ராவணன் போலவும், மம்தா பானர்ஜி சூர்ப்பனகையாகவும் இருக்கிறார்கள் என்ற இவரின் சமீபத்திய பேச்சால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.  

பைரியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

மம்தா பானர்ஜி சூர்ப்பனகை போன்று செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து மக்கள் தெருக்களில் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆனால் இதற்கு முதல்வர் எதுவும் செய்யாமல் இருக்கிறார். இத்தகைய தலைவர்கள் நல்லவர்கள் இல்லை. வங்காளத்தில் இந்துக்கள் பாதுகாப்பாக இல்லை.

அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனில் வங்காளம் மற்றுமொரு ஜம்மு மற்றும் காஷ்மீர் போல் ஆகி விடும். அங்கு இந்துக்கள் வெளியற்றப்பட்டது போல இங்கும் வெளியேற்றப்படுவார்கள்.  காங்கிரஸ் இந்த தருணத்தில் இராவணன் போன்று செயல் பட்டு வருகிறது.

சில நாட்களுக்கு முன்புதான் பாஜக தலைவர்கள் பொறுப்பற்ற முறையில் அர்த்தமற்ற கருத்துகள் தெரிவிப்பதையும், ஆர்வக்கோளாறில் கருத்துகள் கூறுவதையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இதற்காக ஊடகங்களை நாம் குறை கூறக்கூடாது எனவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.