தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அரசாங்க வேலைக்காக அலைவதற்குப் பதிலாக இளைஞர்கள் பீடா கடை வைக்கலாம்: திரிபுரா முதல்வர் அட்வைஸ் 

இளைஞர்கள் அரசாங்க வேலைக்காக அரசியல்வாதிகள் பின்னால் அலைவதை விட, பீடா கடையை வையுங்கள் என திரிபுரா மாநில முதல்வர் விப்லப் குமார் தேவ் 'அட்வைஸ்' செய்துள்ளார்.

News image
Updated On :29 ஏப்ரல் 2018, 11:31 am

திரிபுரா: இளைஞர்கள் அரசாங்க வேலைக்காக அரசியல்வாதிகள் பின்னால் அலைவதை விட, பீடா கடையை வையுங்கள் என திரிபுரா மாநில முதல்வர் விப்லப் குமார் தேவ் 'அட்வைஸ்' செய்துள்ளார்.

திரிபுரா மாநில முதல்வராக பாரதிய ஜனதாவைச் சேர்ந்த விப்லப் குமார் தேவ் பதவி வகித்து வருகிறார். இவர் திரிபுராவில் ஞாயிறன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்பொழுது அவர் பேசியாதவது:

அரசாங்க வேலை பெற வேண்டும் என்று இங்கு இளைஞர்கள் அரசியல்வாதிகளுக்கு பின்னால் செல்லும் நிலைதான் காணப்படுகிறது, இது அவர்கள் நேரத்தை வீணாக்கும் செயலாகும். இளைஞர்கள் அரசியல்வாதிகளுக்கு பின்னால் அலையாமல் பீடா கடையை வைத்து இருந்தால் அவர்களுடைய வங்கி கணக்கில் இப்போது ரூ. 5 லட்சம் இருந்து இருக்கும்.

அதே நேரம் விவசாயம் செய்வது, கோழி அல்லது பன்றி வளர்ப்பு போன்ற தொழில்களை தொடங்குவது என்பதால் தங்களுடைய தகுதி இறங்கிவிடும் என்ற குறுகிய எண்ணமானது படித்த இளைஞர்கள் மத்தியில் காணப்படுகிறது.

நாட்டின் வாழ்வாதாரங்களையும், உணவுப் பாதுகாப்பையும் மேம்படுத்துவதில் இந்த பணிகளுக்கும் சமமான முக்கியத்துவம் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். முதல்வரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் கேலியாக விமர்சிக்கப்படுகிறது.

முன்னதாகவே இவர் இவ்வாறு தொடர்ந்து நகைப்புக்குரிய வகையில் பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். மகாபாரதம் காலத்திலேயே, இன்டர்நெட் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று பேசி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பின்னர் ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம் கொடுத்தார்கள் சரி, டயானா ஹெய்டனுக்கு ஏன் கொடுத்தார்கள் என்றும் கேள்வியை எழுப்பினார்.

அத்துடன் சமீபத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்கள் சிவில் சர்வீஸ் பணியில் சேர வேண்டாம் என்றும் இவர் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.