கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஈரானில் சிக்கி தவித்த 21 தமிழக மீனவர்கள் விடுவிப்பு: மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நடவடிக்கை

ஈரானில் சிக்கி தவித்த 21 தமிழக மீனவர்களும் விடுவிக்கப்பட்டு இந்தியா திரும்ப மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நடவடிக்கை மேற்கொண்டார்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2018, 9:34 am

ANI

ஈரானில் சிக்கி தவித்த 21 தமிழக மீனவர்களும் விடுவிக்கப்பட்டு இந்தியா திரும்ப மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நடவடிக்கை மேற்கொண்டார்.

தமிழகத்தின் கன்னியாகுமரி,  தூத்துக்குடி,  திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த 21 பேர்,  ஈரானில் கடந்த 6 மாதங்களாக மீனவர்களாக  வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஊதியம் தராமல் மோசமாக நடத்தப்படுவதாகவும், அவர்களின் உரிமையாளர், அவர்களின் அடையாளஅட்டைகள்,  கடவுச்சீட்டுகள் ஆகியவற்றை திருப்பித் தராமல் வைத்திருந்தது தெரியவந்தது.

எனவே அவர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வர தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஈரானில் வாடும் தமிழகத்தைச் சேர்ந்த அந்த 21 மீனவர்களும் பாதுகாப்பாக இந்தியா திரும்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்  உறுதியளித்தார்.

இந்நிலையில், அந்த 21 மீனவர்களும் அங்கிருந்து இந்தியா திரும்ப தேவையான நடவடிக்கைகளை மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் செவ்வாய்கிழமை மேற்கொண்டார். ஆகஸ்டு 3-ஆம் தேதி முதல் இவர்கள் குழுக்களாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

ஈரானில் சிக்கி தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்களும் நாடு திரும்ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் அனைவரும் ஆகஸ்டு 3-ஆம் தேதி முதல் குழுக்களாக சென்னை திரும்புவார்கள் என்றிருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.