இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

டிஜிட்டல் கைது மோசடி: ரூ.15 கோடிக்கு மேல் இழந்த கர்நாடக தொழிலதிபர்!

கர்நாடகத்தில் சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து 81 வயது தொழிலதிபரிடம் இருந்து ரூ.15 கோடிக்கும் அதிகமான பணத்தை மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் ஏமாற்றியுள்ளனர்.

News image
Updated On :23 மார்ச் 2026, 3:39 am

தினமணி செய்திச் சேவை

கர்நாடகத்தில் சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து 81 வயது தொழிலதிபரிடம் இருந்து ரூ.15 கோடிக்கும் அதிகமான பணத்தை மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் ஏமாற்றியுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அந்த தொழிலதிபருக்கு கடந்த ஆறு வாரங்களாக விடியோ அழைப்புகள் உட்பட பல தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. பாதிக்கப்பட்டவர் ரூ.25 லட்சத்தை சட்டவிரோதமாகப் பணமாக்கியதற்காக ரூ.5 லட்சம் கமிஷன் பெற்றதாகவும், சட்டவிரோத நிதி நடவடிக்கைகளுக்காக அவர் மீது புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மோசடிக்காரர்கள் கூறியுள்ளனர்.

பணமோசடி வழக்கில் அவரைக் கைது செய்யப்போவதாக மிரட்டிய அந்த குமபல், தொழிலதிபரை வற்புறுத்தி அவரது வங்கி கணக்கு விவரங்களைப் பெற்றுள்ளனர். தொடர்ந்து, பணத்தைப் பாதுகாப்பான அல்லது அரசு கணக்கிற்கு மாற்றச் சொல்லியுள்ளனர். விசாரணை முடிந்ததும பணம் திருப்பித் தரப்படும் என்று அவருக்கு அந்த கும்பல் உறுதியளித்துள்ளனர்.

ஆனால், அதன் பிறகு அந்த கும்பலிடமிருந்து எந்தத் தகவலும் வராததால் அவர்கள் பயன்படுத்திய எண்களைத் தொழிலதிபர் தொடர்புகொண்டுள்ளார். அதனையும் தொடர்புகொள்ள முடியாததால் பாதிக்கப்பட்டவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் கடந்த வாரம் போலீஸில் புகார் அளித்தார்.

சைபர், பொருளாதார மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், பணம் மாற்றப்பட்ட கணக்கைக் கண்டறிந்தனர். எனினும், அதிலிருந்து ரூ.90 லட்சத்தை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது. இந்த மோசடியில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து கைது செய்ய பெலகாவி போலீஸ் ஆணையர் ஒரு தனிப்படையை அமைத்துள்ளார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

Summary

A 81-year-old businessman here allegedly lost over Rs 15 crore in a "digital arrest scam" after fraudsters posing as CBI officials accused him of involvement in a financial crime, police said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.