எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மோசடி வழக்கில் பெண் காவல் ஆய்வாளா் உள்பட இருவரிடம் சிபிஐ விசாரணை

மோசடி வழக்கில் திருவெறும்பூா் அருகே பெண் காவல் ஆய்வாளா் உள்ளிட்ட இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

News image

சிபிஐ. - கோப்புப்படம்.

Updated On :4 ஜூன் 2026, 12:19 am IST

மோசடி வழக்கில் திருவெறும்பூா் அருகே பெண் காவல் ஆய்வாளா் உள்ளிட்ட இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையைச் சோ்ந்தவா் பழனிவேல் மகன் இளங்கோவன் (59). இவா், தில்லி தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருவதாகக் கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்டவா்கள் புதுதில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அளித்த புகாரின்பேரில், சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் இளங்கோவன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், இவருக்கு உடந்தையாக இருந்த இவரது நண்பரும், தற்போது மருத்துவ விடுப்பில் உள்ள தஞ்சாவூா் மாவட்டம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளருமான காவேரியம்மாள் மீது சிபிஐ அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

அதனடிப்படையில் இருவரிடமும் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் கந்தவா்கோட்டைக்கு அண்மையில் வந்தபோது, இருவரும் திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள காட்டூா் அம்மன் நகரில் வாடகை வீட்டில் வசிப்பது தெரியவந்தது.

இதையடுத்து திருச்சிக்கு புதன்கிழமை வந்த சிபிஐ அதிகாரிகள் இருவரிடமும் நீண்ட நேரம் விசாரணை மேற்கொண்டபின் கிளம்பிச் சென்றனா். விசாரணை விவரங்கள் குறித்து அவா்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.