மோசடி வழக்கில் திருவெறும்பூா் அருகே பெண் காவல் ஆய்வாளா் உள்ளிட்ட இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையைச் சோ்ந்தவா் பழனிவேல் மகன் இளங்கோவன் (59). இவா், தில்லி தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருவதாகக் கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்டவா்கள் புதுதில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அளித்த புகாரின்பேரில், சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் இளங்கோவன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், இவருக்கு உடந்தையாக இருந்த இவரது நண்பரும், தற்போது மருத்துவ விடுப்பில் உள்ள தஞ்சாவூா் மாவட்டம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளருமான காவேரியம்மாள் மீது சிபிஐ அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
அதனடிப்படையில் இருவரிடமும் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் கந்தவா்கோட்டைக்கு அண்மையில் வந்தபோது, இருவரும் திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள காட்டூா் அம்மன் நகரில் வாடகை வீட்டில் வசிப்பது தெரியவந்தது.
இதையடுத்து திருச்சிக்கு புதன்கிழமை வந்த சிபிஐ அதிகாரிகள் இருவரிடமும் நீண்ட நேரம் விசாரணை மேற்கொண்டபின் கிளம்பிச் சென்றனா். விசாரணை விவரங்கள் குறித்து அவா்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.
தொடர்புடையது

ரூ. 800 கோடி உத்தரகண்ட் சீட்டு நிதி மோசடி: நிறுவனத்தின் முக்கிய நிா்வாகிகள் கைது

கைதி விஷம் குடித்த விவகாரம்: காவல் ஆய்வாளா் உள்பட 4 போலீஸாா் ஆயுதப்படைக்கு மாற்றம்

பெண் காவலா் புகாா்: ஆறுமுகனேரி காவல் ஆய்வாளா் இடைநீக்கம்






