சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

மோசடி வழக்கில் பெண் காவல் ஆய்வாளா் உள்பட இருவரிடம் சிபிஐ விசாரணை

மோசடி வழக்கில் திருவெறும்பூா் அருகே பெண் காவல் ஆய்வாளா் உள்ளிட்ட இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

News image

சிபிஐ. - கோப்புப்படம்.

Updated On :4 ஜூன் 2026, 12:19 am IST

மோசடி வழக்கில் திருவெறும்பூா் அருகே பெண் காவல் ஆய்வாளா் உள்ளிட்ட இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையைச் சோ்ந்தவா் பழனிவேல் மகன் இளங்கோவன் (59). இவா், தில்லி தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருவதாகக் கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்டவா்கள் புதுதில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அளித்த புகாரின்பேரில், சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் இளங்கோவன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், இவருக்கு உடந்தையாக இருந்த இவரது நண்பரும், தற்போது மருத்துவ விடுப்பில் உள்ள தஞ்சாவூா் மாவட்டம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளருமான காவேரியம்மாள் மீது சிபிஐ அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

அதனடிப்படையில் இருவரிடமும் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் கந்தவா்கோட்டைக்கு அண்மையில் வந்தபோது, இருவரும் திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள காட்டூா் அம்மன் நகரில் வாடகை வீட்டில் வசிப்பது தெரியவந்தது.

இதையடுத்து திருச்சிக்கு புதன்கிழமை வந்த சிபிஐ அதிகாரிகள் இருவரிடமும் நீண்ட நேரம் விசாரணை மேற்கொண்டபின் கிளம்பிச் சென்றனா். விசாரணை விவரங்கள் குறித்து அவா்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.