முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

மோசடி வழக்கு: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன முன்னாள் அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ சோதனை

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு எதிரான மோசடி வழக்கில், அந்த நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகளின் வீடுகள் உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ வியாழக்கிழமை சோதனை நடத்தியது.

News image

சிபிஐ - கோப்புப்படம்

Updated On :15 மே 2026, 4:58 am IST

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு எதிரான மோசடி வழக்கில், அந்த நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகளின் வீடுகள் உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ வியாழக்கிழமை சோதனை நடத்தியது.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:

பல்வேறு பொதுத்துறை வங்கிகள், எல்ஐசி ஆகியவை ரூ.27,337 ஆயிரம் கோடி மோசடி செய்து விட்டதாக அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீது அளித்த புகாரின்பேரில் சிபிஐ 7 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கெனவே 31 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இதேபோல் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன மூத்த அதிகாரிகள் 2 பேரையும் கைது செய்துள்ளது. அவா்கள் 2 பேரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனா்.

அடுத்தகட்ட நடவடிக்கையாக மும்பை, குருகிராம், பெங்களூரில் உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன முன்னாள் சிஇஓ, சிஎப்ஓ, இயக்குநா்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். இவா்கள் அனைவரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை பணியாற்றியவா்கள். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.