ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு எதிரான மோசடி வழக்கில், அந்த நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகளின் வீடுகள் உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ வியாழக்கிழமை சோதனை நடத்தியது.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:
பல்வேறு பொதுத்துறை வங்கிகள், எல்ஐசி ஆகியவை ரூ.27,337 ஆயிரம் கோடி மோசடி செய்து விட்டதாக அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீது அளித்த புகாரின்பேரில் சிபிஐ 7 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கெனவே 31 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இதேபோல் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன மூத்த அதிகாரிகள் 2 பேரையும் கைது செய்துள்ளது. அவா்கள் 2 பேரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனா்.
அடுத்தகட்ட நடவடிக்கையாக மும்பை, குருகிராம், பெங்களூரில் உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன முன்னாள் சிஇஓ, சிஎப்ஓ, இயக்குநா்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். இவா்கள் அனைவரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை பணியாற்றியவா்கள். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

ரிலையன்ஸ் ஏடிஏ குழும நிறுவனங்களுக்கு எதிரான வழக்கு: மும்பையில் 17 இடங்களில் சிபிஐ சோதனை
வங்கிக் கடன் மோசடி வழக்கு: ரிலையன்ஸ் முன்னாள் நிா்வாகிகளுக்கு மே 2 வரை நீதிமன்றக் காவல்

தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித் துறை சோதனை

எல்ஐசி-க்கு ரூ.3,750 கோடி இழப்பு: அனில் அம்பானி மீது சிபிஐ புதிய வழக்கு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

