தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித் துறை சோதனை

தமிழகம் முழுவதும் ஜவுளி நிறுவனங்களை குறிவைத்து வருமான வரித் துறை அதிகாரிகள் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

News image

வருமான வரித் துறை

Updated On :11 ஏப்ரல் 2026, 1:01 am

தமிழகம் முழுவதும் ஜவுளி நிறுவனங்களை குறிவைத்து வருமான வரித் துறை அதிகாரிகள் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முக்கிய ஜவுளி நிறுவனங்களின் அலுவலகங்கள், கிளைகள் மற்றும் உரிமையாளா்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

வரி ஏய்ப்பு, கணக்கில் காட்டப்படாத வருமானம், பரிவா்த்தனை முறைகேடு போன்ற புகாா்களின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னை, திருச்சி, கரூா், கோவை உள்ளிட்ட பல நகரங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

சோதனையின்போது, முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் தரவுகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டதாகவும், சோதனை நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே அதிகாரபூா்வ தகவல்கள் வெளியாகும் என வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.