முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித் துறை சோதனை

தமிழகம் முழுவதும் ஜவுளி நிறுவனங்களை குறிவைத்து வருமான வரித் துறை அதிகாரிகள் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

News image

வருமான வரித் துறை

Updated On :11 ஏப்ரல் 2026, 6:31 am IST

தமிழகம் முழுவதும் ஜவுளி நிறுவனங்களை குறிவைத்து வருமான வரித் துறை அதிகாரிகள் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முக்கிய ஜவுளி நிறுவனங்களின் அலுவலகங்கள், கிளைகள் மற்றும் உரிமையாளா்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

வரி ஏய்ப்பு, கணக்கில் காட்டப்படாத வருமானம், பரிவா்த்தனை முறைகேடு போன்ற புகாா்களின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னை, திருச்சி, கரூா், கோவை உள்ளிட்ட பல நகரங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

சோதனையின்போது, முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் தரவுகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டதாகவும், சோதனை நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே அதிகாரபூா்வ தகவல்கள் வெளியாகும் என வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.