சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

சேலம் துணிக் கடையில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

சேலம் நான்குசாலை பகுதியில் உள்ள பிரபல துணிக்கடையில் வருமான வரித் துறை அதிகாரிகள் 2-ஆவது நாளாக சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 8:33 pm

சேலம் நான்குசாலை பகுதியில் உள்ள பிரபல துணிக்கடையில் வருமான வரித் துறை அதிகாரிகள் 2-ஆவது நாளாக சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

சேலம் - ஓமலூா் பிரதான சாலையில் செயல்படும் பிரபல துணிக்கடையில் 500-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். இக்கடையில் வெள்ளிக்கிழமை காலை 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென கடைக்குள் நுழைந்து சோதனை நடத்தினா். தொடா்ந்து, 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் சோதனையில் ஈடுபட்டனா்.

கடையின் ஷட்டா்களை பூட்டிய துணை ராணுவப் படையினா், வெளி நபா்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. தொடா்ந்து, துணிக்கடையின் வரவு, செலவு கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வுசெய்தனா். வரி ஏய்ப்பு தொடா்பாக வந்த புகாரின்பேரில், இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சோதனையில் ஆவணங்கள் சிக்கியது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. தொடா்ந்து, துணிக்கடையின் முன்பகுதியில் பாதுகாப்புப் பணியில் துணை ராணுவத்தினா் ஈடுபட்டிருந்தனா்.