சேலத்தில் திமுக நிா்வாகிகளின் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அமைச்சா் ராஜேந்திரன், செவ்வாய்க்கிழமை காலை கன்னங்குறிச்சி பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.
முன்னதாக அப்பகுதியில் திமுக பேரூராட்சி செயலாளா் தமிழரசன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் கே.டி. மணி ஆகியோரின் வீடுகள் மற்றும் அரசு வழக்குரைஞராக உள்ள தம்பிதுரையின் வீட்டில் திடீரென வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா்.
வீட்டில் பணம், பரிசுப் பொருள்கள் ஏதேனும் உள்ளதா என அரை மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினா். அப்போது, துணை ராணுவத்தினருடன் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சோதனை நடத்தப்பட்ட இடத்துக்கு வந்தனா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து திமுக நிா்வாகிகள் கூறுகையில், இறுதிக்கட்ட பிரசாரத்தை முடக்கும் நோக்கில், இந்த சோதனை நடைபெற்ாக தெரிவித்தனா்.
தொடர்புடையது

திமுக பிரமுகா் வீட்டில் வருமான வரித் துறை சோதனை

சேலம் துணிக் கடையில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித் துறை சோதனை

திமுக பிரமுகா் வீடு அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

