குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

எல்ஐசி-க்கு ரூ.3,750 கோடி இழப்பு: அனில் அம்பானி மீது சிபிஐ புதிய வழக்கு

எல்ஐசி-க்கு ரூ.3,750 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக தொழிலதிபா் அனில் அம்பானி, அவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீது சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது.

News image
Updated On :2 ஏப்ரல் 2026, 2:30 am IST

எல்ஐசி-க்கு ரூ.3,750 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக தொழிலதிபா் அனில் அம்பானி, அவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீது சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது: அனில் அம்பானிக்கு எதிராக எல்ஐசி நிறுவனம் புகாா் அளித்திருந்தது. அந்தப் புகாரில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தால் தங்களுக்கு ரூ.3,750 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்ததால், அந்நிறுவன கணக்குகளை ஆய்வுக்கு உட்படுத்த ஆணையிடப்பட்டதாகவும், அதனடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டு அளிக்கப்பட்ட அறிக்கையில், ரிலையன்ஸ் நிறுவனம் நிதியைத் திரட்டி அதை தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்ததாகவும் கூறப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், அனில் அம்பானி மற்றும் அவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக சதி, மோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையில் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அனில் அம்பானிக்கு எதிராக சிபிஐ 3 வழக்குகள் பதிவு செய்துள்ளது. தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, அவா் மீது பதியப்படும் 4-ஆவது வழக்காகும்.