கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

உள்நாட்டுப் போரை மம்தா தூண்டாமல் இருக்கட்டும்: என்ஆர்சி விவகாரத்தில் காங்கிரஸ் பதிலடி

அஸ்ஸாம் அமைதியான மாநிலமாக இருப்பதால் அங்கு தேவையில்லாமல் உள்நாட்டுப் போரை மம்தா பானர்ஜி தூண்டி விடாமல் இருக்க வேண்டும் என்று என்ஆர்சி விவகாரத்தில் அஸ்ஸாம் காங்கிரஸ் தலைவர் பதிலளித்துள்ளார்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2018, 12:44 pm

ANI

அஸ்ஸாம் அமைதியான மாநிலமாக இருப்பதால் அங்கு தேவையில்லாமல் உள்நாட்டுப் போரை மம்தா பானர்ஜி தூண்டி விடாமல் இருக்க வேண்டும் என்று என்ஆர்சி விவகாரத்தில் அஸ்ஸாம் காங்கிரஸ் தலைவர் பதிலளித்துள்ளார்.

அஸ்ஸாமில் வசிக்கும் உண்மையான இந்திய குடிமக்கள் எவர்? என்பதை அறிவதற்கான தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதுதொடர்பான வரைவு பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில், 40 லட்சம் பேரின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. இது சர்ச்சைகளுக்கு வித்திட்டது.
 கடந்த 1951-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் இந்த கணக்கெடுப்பு மீண்டும் நடத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 3.29 கோடி மக்களில் 2.89 பேர் தான் அம்மாநிலத்தில் வசிக்கும் அதிகாரப்பூர்வ மக்கள் தொகையாகும். மேலும் அங்கு வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறிள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசு தேவையற்ற உள்நாட்டுப் போரை உண்டாக்கும் சூழலை ஏற்படுத்திவிட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார். மம்தாவின் இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் கட்சியும் மம்தா பானர்ஜிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரிபுண் போரா கூறியதாவதுச

ஒரு மாநிலத்தின் சட்ட ஒழுங்கை கட்டிக் காக்க வேண்டியது அம்மாநில முதல்வரின் கடமை. மம்தா பானர்ஜி ஒரு மாநில முதல்வராக இருந்துகொண்டு இதுபோன்ற தேவையற்ற முறையில் பேச வேண்டாம். அஸ்ஸாம் மாநிலம் மிகவும் அமைதியாக உள்ளது. எனவே மம்தா பானர்ஜி தேவையில்லாமல் உள்நாட்டுப் போரை தூண்டி விடாமல் இருக்கட்டும். அவரின் இந்த கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.