மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

செல்லிடப்பேசியில் தாமாக பதிவான ஆதார் உதவி எண்? மக்கள் குழப்பம்; ஆதார் ஆணையம் மறுப்பு

செல்லிடப்பேசியில் ஆதார் உதவி எண் தாமாக பதிவானதாக ட்விட்டரில் வெளியான தகவல் உண்மையற்றது என்று ஆதார் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2018, 11:44 am

DIN

செல்லிடப்பேசியில் ஆதார் உதவி எண் தாமாக பதிவானதாக ட்விட்டரில் வெளியான தகவல் உண்மையற்றது என்று ஆதார் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

ஆதார் ஆணையத்தின் உதவி அலைபேசி எண் '1800-300-1947' தாமாக செல்லிடப் பேசியில் பதிவானதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டாளார்கள் ட்விட்டரில் புகார் தெரிவித்து வந்தனர். ஆதார் ஆணையத்தின் உதவி எண்ணை எனது அனுமதி இல்லாமல் எனது செல்லிடப்பேசியில் பதிவிட முடிந்தால், எனது செயல்களை கண்காணித்து, தகவல்களை சேகரிக்க முடியாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்ற வகையில் கேள்வி எழுப்பி வந்தனர். 

ஆனால், ஆதார் ஆணையம் இதற்கு முற்றிலுமாக மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 

"ஆதார் ஆணையத்தின் பயன்பாட்டில் இல்லாத பழயை உதவி எண் செல்லிடப்பேசியில் தாமாக பதிவானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆதார் ஆணையம் சார்பாக எந்த ஒரு செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனத்திடமோ அல்லது தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்திடமோ இதுபோன்ற வசதியை இணைக்குமாறு அறிவுறுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

செல்லிடப்பேசியில் பதிவான உதவி எண் என குறிப்பிடப்படும் '18003001947' ஆதார் ஆணையத்தின் சரியான இலவச அழைப்பு எண் அல்ல. மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த செயல்களை செய்துள்ளனர். 

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருக்கும் ஆதார் ஆணையத்தின் சரியான இலவச அழைப்பு எண் '1947' ஆகும். 

பொதுச் சேவை எண்கள் பட்டியலில் '18003001974' அல்லது '1947' என்ற எண்களை இணைக்குமாறு எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனத்திடமோ அல்லது செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனத்திடமோ ஆதார் ஆணையம் சார்பில் வலியுறுத்தப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.