பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!

மேற்காசிய பதற்றமான சூழல், இந்திய மருத்துவத் துறையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

News image
சர்வதேச பயணிகள்- AP
Updated On :17 மார்ச் 2026, 2:46 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி : மேற்காசிய பதற்றமான சூழல், தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார என்சிஆர் பகுதியில் மருத்துவத் துறையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த பிப். 28முதல் தொடங்கிய ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்கள் மற்றும் அதற்கு ஈரான் படைகளின் எதிர்வினை ஆகியவற்றால் மேற்காசிய பிராந்தியத்தில் பெரும்பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், அப்பகுதிகளுக்கான விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடாக, மேற்காசிய பிராந்தியத்திலிருந்து இந்தியாவுக்கு வருகை தரும் நோயாளிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

இங்குள்ள நவீன மருத்துவ சுகாதார கட்டமைப்பு மற்றும் நிபுணத்துவம் காரணமாக வெளிநாடுகளிலிருந்து ஏராளமான நோயாளிகள் பல்வேறு சிகிச்சைகளுக்காக தில்லிக்கு வருகின்றனர். இந்திய மருத்துவ சுகாதார சேவைகளுக்கான மிகப்பெரிய சந்தையாகச், சுமார் 30 - 40 சதவீதம் சர்வதேச மருத்துவ பயணிகளுடன் மேற்காசியா முதன்மையாகத் திகழ்கிறது.

இந்நிலையில், அண்மைக் காலமாக இராக், ஓமன், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்து சிகிச்சைகளுக்கு வரும் நோயாளிகள் விகிதம் குறைந்துள்ளது. அவ்வகையில் கணக்கிட்டால், கடந்த மாதக் கடைசி 10 நாள்களில் பதிவான சர்வதேச நோயாளிகள் வருகையுடன் இம்மாத முதல் 10 நாள்கள் வருகையை ஒப்பிட்டால், மேற்காசியாவிலிருந்து வரும் நோயாளிகள் விகிதம் 75 சதவீதம் சரிவடைந்துள்ளது என்று இது குறித்த தகவலறிந்த மருத்துவர்கள் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்தனர்.

summary

The escalating West Asia conflict is likely having an adverse impact on medical tourism in the capital, with hospitals across Delhi-NCR reporting an average decline of around 30 per cent in international patient footfall.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.