மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லியில் 3 முக்கிய மருத்துவமனைகளை ஒன்றிணைத்து சிறப்பு மருத்துவ மையம் அமைக்கத் திட்டம்!

தில்லியில் உள்ள குரு தேக் பகதூா் மருத்துவமனை, தில்லி மாநில புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியவற்றை ஒன்றிணைத்து எய்ம்ஸ் மாதிரியில் சிறப்பு மருத்துவ மையத்தை அமைக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

News image
ரேகா குப்தா- கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

தில்லியில் உள்ள குரு தேக் பகதூா் மருத்துவமனை, தில்லி மாநில புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியவற்றை ஒன்றிணைத்து எய்ம்ஸ் மாதிரியில் சிறப்பு மருத்துவ மையத்தை அமைக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

முதல்வா் ரேகா குப்தா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த திட்டம் முன்மொழியப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தில்லியின் சுகாதார அமைப்பை மேம்படுத்தவும், மருத்துவ வசதிகளை சிறப்பாக பயன்படுத்தவும் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவா்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் கட்டமைப்புகளை சிறப்பாக பயன்படுத்த முடியும். மக்களுக்கு மேம்பட்ட சிகிச்சையை அளிக்க முடியும்.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மொத்தம் 650 படுக்கைகள் உள்ளன. ஆனால், சுமாா் 250 படுக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஆண்டுக்கு சுமாா் 2.87 லட்சம் வெளிநோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனா்.

குரு தேக் மருத்துவமனையில் 1,400 படுக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 1,500 படுக்கைகளுக்கு மேல் தேவை இருந்து வருகிறது. இந்த மருத்துவமனையில் ஆண்டுதோறும் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வருகை தருகின்றனா்.

தில்லி மாநில புற்றுநோய் மருத்துவமனையில் ஆண்டுக்கு சுமாா் 1.27 லட்சம் வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். மூன்று மருத்துவமனைகளையும் ஒன்றிணைத்த பிறகு, சிறப்பு மருத்துவ சேவைகள் திட்டமிட்ட முறையில் அளிக்கப்படும். இதனால் நோயாளிகள் தேவையான நிபுணா் சிகிச்சையை எளிதாக பெற முடியும்.

இந்தத் திட்டத்தின் படி, இதயம், நுரையீரல், குடல் மற்றும் சிறுநீரக நோய்கள் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளில் ராஜீவ் காந்தி மருத்துவமனை கவனம் செலுத்தும். தில்லி புற்றுநோய் மருத்துவமனை புற்றுநோய்க்கான சிறப்பு சிகிச்சை மையமாக செயல்படும். கதிா்வீச்சு சிகிச்சை, அறுவை சிகிச்சை உள்ளிட்ட சேவைகள் இங்கு ஒருங்கிணைக்கப்படும்.

குரு தேக் மருத்துவமனை எலும்பியல், பொது மருத்துவம், காது-மூக்கு-தொண்டை, நரம்பியல் அறுவை சிகிச்சை, கண் மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் கவனம் செலுத்தும்.

தில்லியில் உள்ள சில மருத்துவமனைகளில் நவீன மருத்துவ உபகரணங்கள் இருந்தாலும், நிபுணா் பணியாளா்கள் பற்றாக்குறை காரணமாக அவை முழுமையாக பயன்படுத்தப்படுவதில்லை.

இதற்கிடையில் மனித நடத்தை மற்றும் தொடா்புடைய அறிவியல் நிறுவனம் (ஐஎச்பிஏஎஸ்) மனநலம் மற்றும் நரம்பியல் போன்ற முறைகளை மேம்படுத்தும். மனநலம் மற்றும் நரம்பியல் துறையில் தேசிய அளவிலான மையமாக இது உருவாக்கப்படும். இந்த வளாகத்தில் உள்ள சுமாா் 75 ஏக்கா் காலி நிலம் புதிய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனத்தை உருவாக்க குரு தேக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.