பிரதமர் நரேந்திர மோடியுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பிரதமர் நரேந்தி மோடியை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு
Updated on
1 min read

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பிரதமர் நரேந்தி மோடியை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது மாநில வளர்ச்சி தொடர்பான வரைவு திட்ட அறிக்கையை சமர்பித்துள்ளார். அதில், ஒன்றிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர், தெலங்கானாவில் அதிகளவிலான பிற்படுத்தப்பட்டோர் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு கல்வி மற்றும் அரசு வேலைகளில் முன்னுரிமை அளிப்பது தொடர்பாக மாநில திட்டம் குறித்து ஆலோசித்தார். மேலும் அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

மேலும் தெலங்கானா மாநிலத்துக்கான புதிய ரயில் சேவைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தெலங்கானாவில் ஐஐஎம் மற்றும் ஐஐஐடி உள்ளிட்டவைகளை ஏற்படுத்தித் தர வேண்டி பிரதமரிடம் பேசியுள்ளார். மாவட்டங்களுக்கான ஜவஹர் நவோதயா வித்யாலையா, புதிய சட்டப் பேரவை வளாகம், கோதாவரி ஆற்றின் காலேஷ்வரம் திட்டத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி உள்ளிட்டவை தொடர்பாகவும் தெலங்கானா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com