திருவனந்தபுரம்: கேரளாவில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானம் மூலம் நேரடியாக ஆய்வு செய்தார்.
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பகுதிகளில் சாலைகள், பாலங்கள் என கட்டமைப்பு அனைத்தும் முற்றிலுமாக உருக்குலைந்து விட்டது. பலர் வீடிழந்து அவதிப்பட்டு வருகின்றனர். மாநிலத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் மீண்டும் மூன்று நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணையில் நீர் குறைந்தது காரணமாக அச்சம் குறைந்துள்ளது. இருப்பினும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையானது மீட்பு பணிகளில் தொய்வை ஏற்படுத்துகிறது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு பல்வேறு தரப்பிலிருந்து நிதி உதவி அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கேரளாவிற்குத் தேவையான உதவிகளை தரும்படி மத்திய அரசிடம் பினராயி விஜயன் அரசு கோரிக்கையை விடுத்துள்ளது.
இந்நிலையில் கேரளாவில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானம் மூலம் நேரடியாக ஆய்வு செய்தார். கொச்சியில் பாதிப்பு தொடர்பாக மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை செய்தார். அத்துடன் மத்திய அரசு மாநிலத்திற்குத் தேவையான உதவிகளை வழங்குவதாக அவர் உறுதியளித்து உள்ளதாக பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

ஃபிஃபா உலகக் கோப்பை: முதல் அணியாக அடுத்த சுற்றுக்குத் தேர்வான மெக்சிகோ!

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி நாள் எப்போது?
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu



