ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சூட்டில் சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லையோரப் பகுதிகளில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை ஒழுக்கும் விதமாக அங்கு ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அங்கு கடந்த சில மாதங்களாக இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பயங்கரவாதிகள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், ஸ்ரீகர் அருகில் அமைந்துள்ள பாடாமாலூ எனுமிடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
அப்போது திடீரென பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இருதரப்புக்கும் இடையில் நீடித்து வரும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஜம்மு-காஷ்மீர் போலீஸ் அதிகாரி ஒருவர் மற்றும் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


