ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ரஃபேல் ஊழல் தான் மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் எடுத்திருக்கும் ஆயுதம்

மக்களிடம் சென்று மோடி அரசுக்கு எதிரான மனப்பான்மையை உருவாக்குங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுக்கு கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை அறிவுறுத்தியுள்ளார். 

News image
Updated On :18 ஆகஸ்ட் 2018, 3:09 pm

மக்களிடம் சென்று மோடி அரசுக்கு எதிரான மனப்பான்மையை உருவாக்குங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுக்கு கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை அறிவுறுத்தியுள்ளார். 

2019 மக்களவைத் தேர்தலில் மோடி அரசுக்கு எதிராக வெற்றி பெற ராகுல் தலைமையிலான காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அதேபோன்று சனிக்கிழமை மாநில பொறுப்பாளர்கள், மாநில தலைவர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் ராகுல் காந்தி பேசியதை பகிர்ந்துகொண்டார். அதன்படி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது,

"மோடி அரசின் ஊழல்களை பிரச்சாரம் மூலம் பூத், மாவட்டம், மாநிலம் என அனைத்து தரப்புகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். மோடி அரசின் ஊழலுக்கு ரஃபேல் விவகாரம் சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு தனியார் நிறுவனத்தின் 1 லட்சம் கோடி ரூபாய் லாபத்துக்காக அரசுக்கு ரூ. 40,000 கோடி இழப்பை ஏற்படுத்தும் செயலாகும். மக்களிடம் நாம் செல்லாவிட்டால், வேறு யார் செல்வார்கள்.  

காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள், பொதுச் செயலாளர்கள், அனைத்து இந்திய காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள், செயலாளர்கள் உட்பட அனைவரும் ரஃபேல் ஊழலில் நேர்மையான, தெளிவான, அதிகார தலையீடு இல்லாத, நாடாளுமன்றக் குழு விசாரணையை அரசு அமைப்பதற்கு வலியுறுத்த வேண்டும். 

அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். நாம் நிறுத்தக் கூடாது. ரஃபேல் ஊழல் வெளிவரும் வரை நாம் நிறுத்தப்படாமல், தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.  

பிராந்திய வாக்காளரை பாதிக்கும் விவகாரங்களை குறிப்பிட்ட மாநிலங்கள் கண்டறிந்து மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வெளிக்கொண்டுவர  வையுங்கள்" என்றார். 

மாநிலங்கள் அளவில் கட்சியில் இருந்து வந்த விரிசல்கள் காரணமாக கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியினால் மிகப் பெரிய அளவில் போராட்டம் போன்ற செயல்களை பெரிதளவு வெளிக்கொண்டு வர முடியவில்லை. இது சரிசெய்யப்பட்டு வருவதாக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.