பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

நோட்டாவுக்கு 'நோ' சொன்ன உச்ச நீதிமன்றம்: குதிரை பேரம் அதிகரிக்கும் என தலைமை நீதிபதி எச்சரிக்கை

மாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த வேண்டிய கோரிக்கையை உச்ச நீதிமன்றம் செவ்வாய்கிழமை நிராகரித்தது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2018, 12:48 pm

மாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த வேண்டிய கோரிக்கையை உச்ச நீதிமன்றம் செவ்வாய்கிழமை நிராகரித்தது.

மாநிலங்களவைத் தேர்தலிலும் நோட்டா (யாருக்கும் வாக்கில்லை) எனும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம், அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் காங்கிரஸ் தலைவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசௌத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது. 

அப்போது மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா இடம்பெற தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கூறுகையில், 

நோட்டா என்பது மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட நல்வாய்ப்பு. ஆனால் மாநிலங்களவைத் தேர்தல் என்பது வேறு. அதில் நோட்டா இடம்பெறுவதன் மூலம் குதிரை பேரம் அதிகரிக்கும், ஜனநாயகம் படுகொலை செய்யப்படும். இதனால் ஊழலும், சச்சரவுகளும் அதிகரிக்கும். எனவே மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா பயன்படுத்த தடை விதிக்கிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.