டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சபரிமலை விவகாரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் வீடு நோக்கி பாஜகவினர் பேரணி 

சபரிமலை கோவில் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  கேரள முதல்வர் பினராயி விஜயன் வீடு நோக்கி பாஜகவினர் பேரணியாகச் சென்றனர். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:50 pm

DIN

திருவனந்தபுரம்: சபரிமலை கோவில் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  கேரள முதல்வர் பினராயி விஜயன் வீடு நோக்கி பாஜகவினர் பேரணியாகச் சென்றனர். 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது.  இந்த தீர்ப்பை அமல்படுத்தும் முயற்சியில் கேரள மாநில அரசு தீவிரமாக களம் இறங்கியது. இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் மத்தியில்  பலத்த எதிர்ப்பு கிளம்பியது. 

கேரள அரசுக்கு எதிராக  பா.ஜனதாவும், இந்து அமைப்புகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக சபரிமலை கோவில் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சபரிமலை கோவில் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  கேரள முதல்வர் பினராயி விஜயன் வீடு நோக்கி பாஜகவினர் பேரணியாகச் சென்றனர். 
 
பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுப்பு அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது தடுப்பை உடைத்து உள்ளே செல்ல அவர்கள் முயற்சி மேற்கொண்டனர். இதனால் போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பா.ஜனதவினரை விரட்டினர். 

இச்சம்பவத்தினால் அங்கு பரபரப்பு நிலவியது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.