மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாகா திடீர் ராஜிநாமா

நாளை நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில், மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சித் தலைவருமான உபேந்திர குஷ்வாகா தனது

News image
Updated On :10 டிசம்பர் 2018, 8:05 am

DIN

புதுதில்லி: நாளை நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில், மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சித் தலைவருமான உபேந்திர குஷ்வாகா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து கடந்த 2013-ஆம் ஆண்டு விலகிய உபேந்திர குஷ்வாகா, தனிக் கட்சி தொடங்கி, பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார்.

இதனிடையே கடந்த மாதம் அக்டோபர் மாதம் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவை உபேந்திர குஷ்வாகா சந்தித்தார்.

இதனால், அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பாரா? என்பது தொடர்பாக யூகங்கள் வெளியாகின. ஆனால், எனது கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் நீடிக்கிறது. அடுத்த முறையும் பிரதமராக மோடியே வர வேண்டும் என்பதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறேன் என்று உபேந்திர குஷ்வாகா தெரிவித்தார்.

இந்நிலையில், நாளை நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில், மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சித் தலைவருமான உபேந்திர குஷ்வாகா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். மேலும் ஜனநாயக கூட்டணியில் இருந்து தனது கட்சி விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். 

உபேந்திர குஷ்வாகாவின் அறிவிப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.