பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

ரூ.18,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி: ராஜஸ்தான் முதல்வர் உத்தரவு

ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்து காங்கிரஸ் அரசு புதன்கிழமை உத்தரவிட்டது. 

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்து காங்கிரஸ் அரசு புதன்கிழமை உத்தரவிட்டது. 

ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில், 199 தொகுதிகளில் காங்கிரஸ் 99 தொகுதிகளையும், அதன் கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றின. பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைத்ததையடுத்து, காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது. இத்தேர்தலில் பாஜகவுக்கு 73 இடங்கள்தான் கிடைத்தன. 

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆல்பர்ட் அரங்கில் புதிய முதல்வராக கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட் (67), துணை முதல்வராக சச்சின் பைலட் (41) பதவியேற்றனர். இருவருக்கும் ஆளுநர் கல்யாண் சிங் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 

இந்நிலையில், தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் தனிநபர் விவசாயியின் ரூ.2 லட்சம் வரையிலான ரூ.18,000 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் புதன்கிழமை உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.