பாஜக நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாயி 94-ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், வாஜ்பாயிக்கு மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், வாஜ்பாயி சிலை விரைவில் திறக்கப்படும் என ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் மூத்த தலைவரும், பிகார் முதல்வருமான நிதீஷ் குமார் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி-க்கு பாட்னாவில் சிலை அமைக்கப்படும். விரைவில் அதற்கான இடமும் தேர்வு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக, 25 அடி உயரத்தில் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் அமைந்துள்ள லோக் பவனில் அடல் பிஹாரி வாஜ்பாயி சிலை அமைக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








