மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினம்: நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94-வது பிறந்த தினத்தையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

News image
Updated On :25 டிசம்பர் 2018, 1:25 pm IST

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94-வது பிறந்த தினத்தையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமரும், பா.ஜ.க-வின் மூத்தத் தலைவருமான வாஜ்பாய் கடந்த ஆகஸ்ட் மாதம் காலமானார். இதையடுத்து அவருக்கு தில்லி ராஷ்ட்ரீய ஸ்மிருதி தலம் பகுதியில் ரூ.10.51 கோடி செலவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. சதைவ் தலம் என பெயரிடப்பட்டுள்ள அந்த நினைவிடம் வாஜ்பாயின் 94ஆவது பிறந்த தினத்தையொட்டி இன்று திறக்கப்பட்டது.

இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள், பிரபலங்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து அவர்கள், வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதையும் செலுத்தினர்.

இதேபோல் நாடு முழுவதிலும் உள்ள பாஜக அலுவலகங்களிலும் வாஜ்பாய் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்படுகிறது.  முன்னதாக வாஜ்பாயின் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.