உத்தரப் பிரதேசத்தை ஆளும் பாஜக தலைமையிலான அரசு வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்ப்பதிலும் தோல்வியடைந்து விட்டதாக அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து, லக்னெளவில் திங்கள்கிழமை நடைபெற்ற விழா ஒன்றில் அவர் கூறியதாவது:
சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பாஜக தலைமையிலான ஆட்சியின் கீழ் பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். கடன்சுமை அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். மாநில இளைஞர்களின் எதிர்காலம் இருள் சூழந்து காணப்படுகிறது. இளம்தலைமுறையினரின் கனவுகளை பாஜக அரசு குழி தோண்டி புதைத்து வருகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதில் மாநில அரசு தோல்வி கண்டுள்ளது.
தனக்குச் சிறிய அளவில் எதிர்ப்பு ஏற்படுவதையும் முதல்வர் யோகி ஆதித்யநாத் விரும்பவில்லை. தங்களது பிரச்னைகளைத் தெரிவிக்கும் இளைஞர்களை மாநில அரசு சிறைக்கு அனுப்பி வைக்கிறது. மாணவிகளும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர் என்றார் அவர்.
லக்னௌவில் யோகி ஆதித்யநாத் கடந்த ஆண்டு காரில் சென்றபோது சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த மாணவர் அமைப்பினர், காரை மறித்து கருப்புக் கொடி காட்டினர். இதைத் தொடர்ந்து, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில், 2 மாணவிகளும் அடங்குவர். 20 நாள்களுக்குப் பிறகு அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான், இஸ்ரேலுக்கு அவசியமின்றிப் பயணம் செய்ய வேண்டாம்: மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை

கனடா லைஃப் நிறுவனத்தின் பல மில்லியன் யூரோ ஐ.டி. ஒப்பந்தத்தைக் கைப்பற்றிய டிசிஎஸ்!

உலகக் கோப்பை கால்பந்து 2026!

ஊத்தங்கரை அருகே லாரி மோதியதில் கேபிள் ஆபரேட்டா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



