தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

குடிமைப் பணிகள் தேர்வு வயது வரம்பில் மாற்றமா?: மத்திய அமைச்சர் மறுப்பு

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகள் தேர்வை (சிவில் சர்வீஸ்) எழுதுவதற்கான வயது உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவலை

News image
Updated On :26 டிசம்பர் 2018, 1:11 am IST


ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகள் தேர்வை (சிவில் சர்வீஸ்) எழுதுவதற்கான வயது உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவலை மத்தியப் பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மறுத்தார்.
குடிமைப் பணிகள் தேர்வுகளுக்கான பொதுப் பிரிவினரின் வயது வரம்பை 32-இல் இருந்து 27 ஆகக் குறைக்க நீதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. 
புதிய இந்தியாவுக்கான உத்திகள் -75 தலைப்பில் கடந்த நவம்பர் இறுதியில் மத்திய அரசுக்கான பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை நீதி ஆயோக் வெளியிட்டது. வரும் 2022-23ஆம் ஆண்டுக்குள் படிப்படியாக குடிமைப் பணிகள் தேர்வுகளில் பொதுப் பிரிவினருக்கான வயது உச்ச வரம்பை 32-இல் இருந்து 27 ஆகக் குறைக்கவும், ஆட்சிப் பணியில் பிரிவுகள் அடிப்படையில் தரவரிசை வழங்குவதற்குப் பதிலாக திறமையின் அடிப்படையில் பணியை ஒதுக்கீடு செய்யலாம் எனவும் பரிந்துரைத்திருந்தது. இந்நிலையில், குடிமைப் பணிகள் தேர்வில் பங்கேற்பதற்கான வயது உச்ச வரம்பை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. அதுபோன்ற முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் மற்றும் பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் செவ்வாய்க்கிழமை கூறுகையில், குடிமைப் பணிகள் தேர்வில் பங்கேற்பதற்கான வயது உச்ச வரம்பில் மாற்றம் செய்வது தொடர்பாக மத்திய அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இது தொடர்பான அனைத்துச் செய்திகள், ஊகங்களை ஒதுக்கிட வேண்டும் என்றார்.
மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அதிகபட்ச வயது குறைக்கப்பட உள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. அரசின் யோசனையில் அதுபோன்ற முன்மொழிவு ஏதும் இல்லை என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.