கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மஜத பிரமுகர் கொலை தொடர்பான கருத்துக்கு முதல்வர் மன்னிப்பு கோர வேண்டும்: எடியூரப்பா

மத்தூரில் மஜத பிரமுகர் கொலை தொடர்பான கருத்துக்கு முதல்வர் குமாரசாமி மன்னிப்பு கோர வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.

News image
Updated On :26 டிசம்பர் 2018, 2:32 am IST


மத்தூரில் மஜத பிரமுகர் கொலை தொடர்பான கருத்துக்கு முதல்வர் குமாரசாமி மன்னிப்பு கோர வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மண்டியா மாவட்டம், மத்தூரில் மஜத பிரமுகர் பிரகாஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது வேதனை அளிக்கிறது என்றாலும், இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள முதல்வர் குமாரசாமி, கொலையாளிகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கொலையாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை. ஆனால், முதல்வர் குமாரசாமியே சட்டம்-ஒழுங்கை குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளது தவறாகும். இதற்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும்.
பாஜக ஆட்சியில் இருந்த போது, பாஜகவைச் சேர்ந்த பல பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதற்காக நாங்கள் இது போன்ற கருத்துகளை தெரிவிக்கவில்லை. முதல்வராக பதவி வகிக்கும் குமாரசாமி அப்பதவிக்கான கெளரவத்தை வழங்கவில்லை என்றார்.
மேலும், அமைச்சரவை விரிவாக்கம் செய்ததில் ஏற்பட்ட குழப்பத்தால், மாநிலத்தில் கூட்டணி ஆட்சியின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. மாநிலத்தில் வறட்சி, குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான வளர்ச்சிப் பணிகளில் மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் ஈடுபட வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.