மத்தூரில் மஜத பிரமுகர் கொலை தொடர்பான கருத்துக்கு முதல்வர் குமாரசாமி மன்னிப்பு கோர வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மண்டியா மாவட்டம், மத்தூரில் மஜத பிரமுகர் பிரகாஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது வேதனை அளிக்கிறது என்றாலும், இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள முதல்வர் குமாரசாமி, கொலையாளிகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கொலையாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை. ஆனால், முதல்வர் குமாரசாமியே சட்டம்-ஒழுங்கை குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளது தவறாகும். இதற்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும்.
பாஜக ஆட்சியில் இருந்த போது, பாஜகவைச் சேர்ந்த பல பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதற்காக நாங்கள் இது போன்ற கருத்துகளை தெரிவிக்கவில்லை. முதல்வராக பதவி வகிக்கும் குமாரசாமி அப்பதவிக்கான கெளரவத்தை வழங்கவில்லை என்றார்.
மேலும், அமைச்சரவை விரிவாக்கம் செய்ததில் ஏற்பட்ட குழப்பத்தால், மாநிலத்தில் கூட்டணி ஆட்சியின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. மாநிலத்தில் வறட்சி, குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான வளர்ச்சிப் பணிகளில் மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் ஈடுபட வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

00:00! மிக அதிக கருத்துகளைப் பெற்ற பிறந்த நாள் பதிவு!

நேரம் 00:00 என்பதற்கு அர்த்தம் என்ன? த்ரிஷா பதிவு வைரல்

காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என நினைத்தால்... உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!

கயல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



