ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

'மக்கள் மருத்துவர்' ஜெயச்சந்திரனை 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பாராட்டிய பிரதமர் மோடி 

சமீபத்தில் சென்னையில் மரணமடைந்த 'மக்கள் மருத்துவர்' ஜெயச்சந்திரனை 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். 

News image
Updated On :30 டிசம்பர் 2018, 3:49 pm IST

புது தில்லி: சமீபத்தில் சென்னையில் மரணமடைந்த 'மக்கள் மருத்துவர்' ஜெயச்சந்திரனை 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். 

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் பிரதமர் மோடி வானொலி வழியாக  பொதுமக்களுக்கு உரையாற்றும் 'மன் கி பாத்' நிகழ்ச்சி நடைபெறும். 

இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் மரணமடைந்த 'மக்கள் மருத்துவர்' ஜெயச்சந்திரனை தனது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். 

அவர் தனது உரையில் பேசியதாவது:

சமீபத்தில் மறைந்த சென்னை டாக்டர் ஜெயச்சந்திரன் சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் எப்போதும் ஆர்வத்துடன் இருந்தார்.

இதேபோல 15,000 பெண்களுக்கு பிரசவம் பார்த்த கர்நாடக பெண் நரசம்மாவும் ஏழைகளுக்கு சேவை புரிந்துள்ளார்.

குஜராத்தில் அமைந்துள்ள உலகின் உயரமான சர்தார்படேல் சிலையானது இந்தியாவின் ஒற்றுமைக்கான ஆதாரமாக விளங்குகிறது. 

பொதுவாகவே நமது பண்டிகைகள் கலாசாரத்தையும், விவசாயத்தையும் சார்ந்து நடைபெறுகின்றன. மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

பொதுவாகவே பண்டிகை சமயங்களில் எடுக்கப்படும் புகைப் படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் புகைப்படங்களை பகிர்வதன் மூலமாக இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையை அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும்.  

2018-ம் ஆண்டில் இந்திய மக்களுக்கு உலகின் மிகப்பெரிய காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டது. அத்துடன் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் 95 சதவீத கிராமங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன.

இவ்வாறு மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.