லக்னௌ: ஜென்பூரில் உள்ள வீர் பகதூர் சிங் புர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றி துணைவேந்தரின் அதிரடிப் பேச்சால் கடும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
படித்துப் பெரிய ஆள் ஆக வேண்டும், பல்கலையின் பெயரைக் காப்பாற்ற வேண்டும், உங்கள் பெற்றோரின் கனவை நனவாக்க வேண்டும் என்றெல்லாம் சொல்ல வேண்டிய துணைவேந்தர் ராஜா ராம் யாதவ், சண்டை என்று யாராவது உங்களிடம் வந்தால் என்னிடம் அழுதுகொண்டு வந்து நிற்காதீர்கள் என்று கூறுகிறார்.
அதாவது, இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களே, உங்களிடம் யாராவது சண்டைக்கு வந்தால் உடனே என்னிடம் வந்து அழுதுகொண்டு நிற்காதீர்கள். உங்கள் எதிரியை அடித்து நொறுக்குங்கள். முடிந்தால் அடித்துக் கொன்றுவிடுங்கள். வரும் பிரச்னையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
இவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து கடும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. மாணவர்களுக்கு நன்னடத்தையை ஏற்படுத்த வேண்டிய ஒருவரே இப்படிக் கூறலாமா என்று கலங்குகிறார்கள் பெற்றோர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.