கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பாரதிய ஜனதா அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னாள் முதல்வர் எடியூரப்பா அறிவிக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக் கிழமை அங்கு நடைபெற்ற 'பரிவர்த்தன் பேரணியில்' பிரதமர் மோடி கலந்து கொண்டார். எடியூரப்பா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி பேசும்பொழுது கர்நாடக அரசு ஊழலில் திளைப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் கர்நாடக காங்கிரஸ் அரசினை அவர் "10 சதவீத கமிஷன் கவர்ன்மெண்ட்" என்று விமர்சித்திருந்தார்.