டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது: தம்பிதுரை எம்.பி பேட்டி!

நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்கும் எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு கிடையாது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருடனான சந்திப்புக்குப் பின் அதிமுக எம்.பி., தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:11 pm

DIN

புதுதில்லி: நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்கும் எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு கிடையாது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருடனான சந்திப்புக்குப் பின் அதிமுக எம்.பி., தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பட்டாசுத் தடை மற்றும் பட்டாசுத் தொழிலுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளோடு மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பியுமான தம்பிதுரை மற்றும் தமிழக அமைச்சர்கள் பெஞ்சமின், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் , மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்தனை சந்தித்தனர்.

சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை கூறியதாவது:-

பண்டிகை காலங்களில் பயன்படுத்தப்படும் பட்டாசு உற்பத்திக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கப்படாது என மத்திய அமைச்சர் எங்களிடம் உறுதி அளித்துள்ளார்.

அத்துடன் பட்டாசு தொழிற்சாலைகள் பாதிக்கப்படாமல் இருக்க சுற்றுச்சூழல் விதியில் திருத்தம் கொண்டுவர கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்கும் எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.