ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பிரதமர் மோடி பேச்சு ஒன்றும் புதிதல்ல: சோனியா சாடல்

பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு ஒன்றும் புதிதல்ல என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா சாடியுள்ளார்.

News image
Updated On :7 பிப்ரவரி 2018, 1:24 pm

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை உரையாற்றினார். அப்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய நரேந்திர மோடி, இந்தியாவின் இந்த நிலைக்கு காங்கிரஸ் கட்சிதான காரணம். இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் நாட்டினை பிளவுபடுத்திவிட்டது என்று கடுமையாக விமரிசித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா பேசியதாவது:

குடியரசுத் தலைவர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது ஒன்றும் புதிதல்ல. அதே பழைய பல்லவியை மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டிருக்கிறார்.

ஆனால் பிரதமரிடம் மக்களின் எதிர்பார்ப்பு வேறு மாதிரியானது. அவர்கள் வேலைவாயப்பை எதிர்பார்க்கின்றனர். தங்களின் எதிர்காலம் குறித்து எதிர்பார்க்கின்றனர். நாட்டின் வளர்ச்சியை எதிர்பார்க்கின்றனர். ஆனால் இதுகுறித்து பிரதமர் மோடி எதுவும் குறிப்பிடவில்லை என்று சாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.